உறுப்பியல் 'ஈரசை நாற்சீர்'

23

 
     தானே நின்றும் சீராம்; நிரையசை தானே நின்றும் சீராம்; அவை  (6) அசைச்சீர்
எனப்படும் எ-று.
 
     'பொது ஒரு நாலசையே' எ - து. நாலசையினாலாகிய சீர்  (7) பொதுச்சீர்
எனப்படும் எ-று.
 
     'நான்கு' என்பதை எல்லாவற்றோடுங் கூட்டி (8) மத்திம தீப மாகப்
பொருளுரைத்துக்கொள்க.
 
  'ஈரசை கூடிய சீரியற் சீரவை
ஈரிரண் டென்ப வியல்புணர்ந் தோரே'

'மூவசைச் சீருரிச் சீரிரு நான்கினுள்
நேரிறு நான்கும் வெள்ளை யல்லன
பாவினுள் வஞ்சியின் பாற்பட் டனவே'

'நாலசைச் சீர்பொதுச் சீர்பதி னாறே'

'ஓரசைச் சீருமஃ தோரிரு வகைத்தே'
 

(யா. வி. சூ. 11-14.)
 

'நாலசை யானு நடைபெறு (10) மோரசை
சீர்நிலை யெய்தலுஞ் சிலவிடத் துளவே.
 
என்றார் காக்கை பாடினியார்.
 

(6)

-----


     (6) இவ்வாசிரியர் யாப்பருங் கலத்தில் அசைச் சீரையும் பொதுச்சீர் என்பர் (சூ.14.)

     (7) சிறப்பின்மையின் பொதுச்சீர் என்று பெயர் பெற்றது! பொது. சிறப்பின்மையை
அறிவிக்கும் சொல்; 'புலமிக் கவரைப் புலமை தெரிதல்......பொது மக்கட் காகாவாம்'
(பழ.)

     (8) மத்திம தீபம்: ஒரு சொல் இடையிலே நின்று செய்யுளிற் பலவிடத்தும் நின்ற
சொற்களோடு பொருந்திப் பொருள் விளக்குவது. அணி வகைகளுள் இது தீவகவணியின்
பாற்படும்; தண்டி. சூ. 40.

     (9) இது பல்காயனார் செய்தது என்று யாப்பருங்கல விருத்தியாற் றெரிகிறது;
சூ. 13, மேற்.

     (10) ஓரசைச் சீர் பெரும்பான்மையும் வெண்பாவின் இறுதிக் கண்ணும்
அம்போதரங்க உறுப்பின் இறுதிக் கண்ணும், வஞ்சி விருத்தம் முதலியவற்றின்
இடையிலும் வரும்.