முதலசையோடு ஒன்றியது ஆசிரியத் தளையாகவும், ஒன்றாதது இயற்சீர் வெண்டளையாகவும் 4வழங்கப்படும் எ - று. |
இயற்சீரெனினும் ஆசிரிய வுரிச்சீரெனினும் ஒக்கும். என்னை? |
| '(2) இயற்சீ ரெல்லா மாசிரிய வுரிச்சீர்' |
என்றார் ஆகலின். |
| 'ஒண்டளைக்கே' எ-து. ஒள்ளிய தளை வழங்குமிடத்து எ - று. ஒண்டளை என்பதனை (3) இறுதி 5விளக்காகக் கொள்க. |
'கண்ணிய பூவினம்' என்று சிறப்பித்த வதனால், வெண்பாவினுள் நாலசைச்சீர் வாரா; ஆசிரியத் துள்ளுங் குற்றுகரம் வந்துழி யன்றி வாரா; கலியுள்ளும் பெரும்பான்மையுங் குற்றுகரம் வந்தவழியன்றி வாரா; வஞ்சியுட் குற்றுகரம் வாராதேயும் வரப்பெறும்; வஞ்சியுள் இரண்டு நாலசைச் சீர் ஓரடியுள் அருகிக் கண்ணுற்று நிற்கவும் பெறும்; அல்லனவற்றுட் பெரும்பான்மையும் ஓரடியுள் ஒன்றன்றி வாரா; (4) இரண்டு வரினும் கண்ணுற்று நில்லா; 6பாவின்றுணைப் பாவினத்துட் பயின்று வாரா எனக் கொள்க. |
'ஒண்ணிழற் சீர்' என்று சிறப்பித்தவதனால் நிழல் என்னுஞ் சொல் இறுதியாகிய நிரையீற்றுப் பொதுச் சீர் எட்டும் வஞ்சியுள் அல்லது வாரா எனக் கொள்க. |
| 'நாலசை யானடை பெற்றன வஞ்சியுள் ஈரொன் 7றிணைதலு மேனுழி யொன்றுசென் றாதலு மந்த நிரையசை வந்தன |
|
(2) இது காக்கை பாடினியார் செய்த தென்பர் (யா. வி. சூ. 11, மேற்.) (3) இறுதி விளக்காவது ஒரு சொல் ஈற்றிலே நின்று செய்யுளிற் பல விடங்களிலும் நின்ற சொற்களோடு பொருந்திப் பொருள் விளக்குவது; இது தீவக வணியின் பிரிவுகளுள் ஒன்று (தண்டி. சூ. 40;) கடைநிலைத் தீவகம் என்றும் வழங்கும். (4) நாலசைச்சர் இரண்டு வரின் அவற்றை ஈரசைச்சீர் நான்காகக் கொண்டு கணக்கிடுவர்; ஆதல் பற்றிக் 'கண்ணுற்று நில்லா' என்றார். |
|
(பி - ம்.) 4. கொண்டு வழங்கப். 5. விளக்காகப் பொருளுரைத்துக். 6. பாவினத்துள்ளும் பயின்று. 7. றணைதலு. |