| ஐய ளரும்பிய முலையள் செய்ய வாயினண் மார்பினள் சுணங்கே.' |
(ஐங்-255.) |
இந் நேரிசை யாசிரியப்பாவினுள் நான்கு ஆசிரியவுரிச்சீரும் வந்தவாறு கண்டு கொள்க. |
'பொன்னாரம் வெண்பாட்டு' எ - து : |
| '(2) பொன்னார மார்பிற் புனைகழற்காற் கிள்ளிபேர் உன்னேனென் றூழுலக்கை பற்றினேற் - கென்னோ மனனோடு வாயெல்லா மல்குநீர்க் கோழிப் புனனாடன் பேரே வரும்.' |
இந்நேரிசை வெண்பாவினுள் வெண்பாவுரிச்சீர் நான்கும் வந்தவாறு கண்டு கொள்க. |
'வஞ்சிக்கு ஒன்றும் உதாரணம் பூந்தாமரை' எ - து: |
| '(3) பூந்தாமரைப் 1போதலமரத் தேம்புனலிடை மீன்றிரிதரும் வளவயலிடைக் களவயின் மகிழ் வினைக்கம்பலை மனைச்சிலம்பவும் மனைச்சிலம்பிய 2மணமுரசொலி வயற்கம்பலைக் கயலார்ப்பவும் நாளும் 3மகிழ மகிழ்தூங் கூரன் புகழ்த லானாப் பெருவண் மையனே.' |
இக்குறளடி வஞ்சிப்பாவினுள் நான்கு வஞ்சியுரிச்சீரும் வந்தவாறு கண்டு கொள்க. |
'ஓரசைச்சீர் நன்றறிவாரிற் கயவரும் பாலொடு' எ-து : |
| 'நன்றறி வாரிற் கயவர் திருவுடையார் நெஞ்சத் தவல மிலர்.' |
(குறள், 1072.) |
|
(2) கிள்ளி - சோழன். ஊழ் - முறை. கோழி - உறையூர். மனனோடு வாய் எல்லாம் நாடன்பேரே வரும்; நினைப்பும் சொல்லும் கூறப்பட்டன. (3) களவயின் - நெற்களத்தில். வினைக்கம்பலை - வேலை செய்யுங்கால் எழும் ஒலி. சிலம்பல் - ஒலித்தல். வயலின் கம்பலைக்கு அயல். ஆனா - அமையாத. |
|
(பி - ம்.) 1. போஒ தலமர. 2. மணமுரசொடு. 3. மகிழும். |