இக்குறள் வெண்பாவினுள் இலர் என நிரையசை சீராயினவாறு கண்டு கொள்க. |
| 'பாலொடு தேன்கலந் தற்றே 4பணிமொழி வாலெயி றூறிய நீர்.' |
(குறள், 1121.) |
இக்குறள் வெண்பாவினுள் நீர் என நேரசை சீராயினவாறு கண்டுகொள்க. |
'நாலசைச் சீர்க்கு அன்றதென்னார் அள்ளற் பள்ளத்தினோடு அங்கண் வானத்துமே' எ - து. |
| '(4) அள்ளற்பள்ளத் தகன்சோணாட்டு வேங்கைவாயில் 5வியன்குன்றூரன்' |
என்னும் பழம் பாட்டினுள் 6நாலசைப் பொதுச்சீர் வந்தவாறு கண்டு கொள்க. |
| (5) அங்கண்வானத் தமரரரசரும் வெங்களியானை வேல்வேந்தரும் வடிவார்கூந்தன் 7மங்கையருங் கடிமலரேந்திக் 8கதழ்ந்திறைஞ்சக் சிங்கஞ்சுமந்த மணியணைமிசைக் 9கொங்கிவரசோகின் 10கொழுநிழற்கீழ்ச் செழுநீர்ப்பவளத் திரள்காம்பின் முழுமதிபுரையு முக்குடைநீழல் வெங்கண்வினைப்பகை விளிவெய்தப் |
|
(4) அள்ளற் பள்ளம் - சேற்றை யுடைய வயல். வேங்கை வாயில் - புதுக்கோட்டை யருகிலுள்ளதோர் ஊர். (5) வடிவு - அழகு. கதழ்ந்து - அன்பு மிகுந்து. முக்குடை : சந்திராதித்தம், நித்த விநோதம், சகல பாசனம் என மூன்று குடைகள் அருகதேவருக்கு உண்டு. வெங்கண் - கொடிய. விளிவு - அழிவு. அனந்த சதுஷ்டயம் : அனந்த ஞானம், அனந்த தரிசனம், அனந்த வீரியம் அனந்த சுகம் என்னும் நான்கின் கூட்டம். இதனை சுத்தாத்ம ஸ்வரூபம், என்பர்; இதனை அடைதலே வீடுபேறு. ஆதி - அரூகபரன், |
|
(பி - ம்.) 4. பனிமொழி. 5. வியன்குன்றுரே. 6. ஓரடியினுள் இரண்டு நாலசைச்சீர் வந்தவாறு. இதனைக் குறளடி வஞ்சிப்பாவாக அலகிட்டுக்கொள்க. 7. மடமங்கையருங். 8. கலந். 9. கொங்கவி. 10. குளிர் நிழற்கீழ். |