நிற்பப் பிறிதாகி வருஞ்சீர் முதலசையோ டொன்றுவதூஉம் தன்றளையே, (3) சிறப்பின்றாயினு மெனக் கொள்க. |
'வஞ்சி வண்சீர் (4) விகற்பமும் வஞ்சிக்குரித்து' எ - து, வஞ்சியுரிச்சீர் நிற்பத் தன்வருஞ்சீர் முதலசையோ டொன்றாத தூஉம் ஒன்றாத வஞ்சித்தளையாம் எ - று. |
'வண்சீர்' என்று சிறப்பித்த வதனால் வஞ்சியுரிச்சீர் நின்று பிறிதாகி வருஞ்சீர் முதலசையோடு ஒன்றாததூஉம் ஒன்றாத வஞ்சித்தளையே. சிறப்பின்றாயினு எனக் கொள்க. |
'வல்லோர் வகுத்த வெண்சீர் விகற்பம் கலித்தளையாய்விடும்' எ - து வெண்பாவுரிச்சீர் நின்று தன் வருஞ்சீர் முதலசையோடு ஒன்றாதது கலித்தளையாம் எ - று. |
'வல்லோர் வகுத்த' என்று மிகுத்துச் சொன்னவதனால் வெண்பா வுரிச்சீர் நிற்பப் பிறிதாகி வருஞ்சீர் முதலசையோடு ஒன்றாததூஉம் கலித்தளையே, சிறப்பின்றாயினும் எனக் கொள்க. |
'வெண்டளையாம் ஒண்சீர் அகவல் உரிச்சீர் விகற்பமும்' எ - து ஆசிரியவுரிச்சீர் நின்று தன் வருஞ்சீர் முதலசையோடு ஒன்றாததூஉம் இயற்சீர் வெண்டளையாம் எ - று. |
'ஒண்சீர்' என்று சிறப்பித்த வதனால் ஆசிரிய வுரிச்சீர் நின்று பிறிதாகி வருஞ்சீர் முதலசையோடு ஒன்றாததூஉம் இயற்சீர் வெண்டளையே, சிறப்பின்றாயினுமெனக் கொள்க. |
| 'ஒண்ணுதலே' எ - து. மகடூஉ முன்னிலை. 'இயற்சீர் ரிரண்டு தலைப்பெய றம்முள் விகற்ப மிலவாய் விரவி நடப்பின் அதற்பெய ராசிரி யத்தளை யாகும்' 'இயற்சீ ரிரண்டு தலைப்பெய றம்முள் விகற்ப வகையது வெண்டளை யாகும்' |
|
(3) எந்தச்சீர் நின்றதோ அந்தச்சீரே பின்னும் வந்து ஒன்றுவதும் ஒன்றாததும் சிறப்புடைத் தளையாம். நின்றசீர் அன்றி வேற்றுச்சீர் வந்து ஒன்றுவதும் ஒன்றாததும் சிறப்பில் தளையாம். (4) விகற்பம் - வேறுபாடு. ஒன்றி வராமல் வேறுபட்டு வருவது விகற்பமாம்; ஒன்றாத வஞ்சித்தளை, இயற்சீர் வெண்டளை, கலித்தளை இம் மூன்றும் விகற்பமாகி வந்தவை. |