| துகில்பொதி பவள மேய்க்கும் அகில்படு கள்ளியங் காடிறந் தோரே.' |
(ஐங். தனிப். 2) |
இது நேரொன்றாசிரியத் தளையான் வந்த செய்யுள். |
'சிலை விலங்காகும் வெள்ளை' எ - து : |
நேரிசை வெண்பா |
| (3) சிலைவிலங்கு நீள்புருவஞ் சென்றொசிய நோக்கி முலைவிலங்கிற் றென்று முனிவாள் - மலைவிலங்கு தார்மாலை மார்ப தனிமை பொறுக்குமோ கார்மாலை கண்கூடும் 4போது.' |
இது வெண்சீர் வெண்டளையானும் இயற்சீர் வெண்டளை யானும் வந்த செய்யுள். |
'மருளறு வஞ்சி மந்தாநிலம்' எ - து: |
வஞ்சிப்பா |
| '(4) மந்தாநில 5மருங்கசைப்ப வெண்சாமரை புடைபெயர்தரச் செந்தாமரை நாண்மலர்மிசையெனவாங் கினிதி னொதுங்கிய விறைவனை மனமொழி மெய்களின் வணங்குது மகிழ்ந்தே.' |
இது (5) மயக்கமற வகுத்த வஞ்சித்தளையுள் ஒன்றியதூஉம் ஒன்றாததூஉம் வந்த செய்யுள். |
|
(3) சில விலங்கு - வில் தோற்றோடுதற்குக் காரணமான. ஒசிய - வளைய. விலங்கிற்று - தழுவுதலினின்றும் நீங்கியது. கார்மாலை - கார்காலத்து மாலை நேரம். (4) மந்தாநிலம் - தென்றல். இறைவன் - அருகபரன். முதலிரண்டடிகளில் ஒன்றிய வஞ்சித்தளையும் மூன்றாமடியில் ஒன்றாத வஞ்சித்தளையும் வந்துள்ளன. 'எனவாங்கு' தனிச்சொல். இனிதி.....மகிழ்ந்தே:' சுரிதகம். வஞ்சிப்பா தனிச்சொல்லும் சுரிதகமும் பெற்று இறுவது. (5) மயக்கமற வகுத்த வஞ்சித்தளை - வஞ்சி யுரிச்சீரோடு வஞ்சியுரிச்சீரே புணருவதனால் வருந் தளை; மயக்கம் - கலப்பு. மயக்கமில்லாத கலித்தளை என்பதற்கும் இங்ஙனமே கொள்க. இவ்வஞ்சிப்பாவின் முதன் மூன்றடிகளிலும் வஞ்சியுரிச்சீர்களே வந்துள்ளமை காண்க. |
|
(பி - ம்.) 4. போழ்து. 5. வந்தசைப்ப. |