'நெடுமன் பணைத்தோள் கறைகெழு வேற்கண் நல்லாய்' எ - து மகடூஉ முன்னிலை. 'மிக்க பாதம் கழிநெடிலே' எ - து. ஐஞ்சீரின் மிக்க சீரான் வந்த அடியெல்லாங் கழி நெடிலடி எனப்படும் எ - று. |
| (3) அகலம் உரையிற் கொள்க. 'குறளடி சிந்தடி யிருசீர் முச்சீர் அளவடி நெடிலடி நாற்சீ ரைஞ்சீர் நிரனிறை வகையா னிறுத்தனர் கொளலே' 'கழிநெடி லடியே கசடறக் கிளப்பின் அறுசீர் முதலா வையிரண் டீறா வருவன பிறவும் வகுத்தனர் கொளலே' |
என்பவை யாப்பருங்கலமெனக் கொள்க. (சூ. 24. 25) |
| 'இருசீர் குறளடி சிந்தடி முச்சீர் அளவடி நாற்சீர் 1ரைஞ்சீர் நெடிலடி அறுசீர் கழிநெடி லாகு மென்ப' 'எண்சீ ரெழுசீ ரிவையாங் கழிநெடிற் கொன்றிய வென்ப வுணர்ந்திசி னோரே' |
என்றார் காக்கைபாடினியாரும். |
| '(4) [குறளொரு பந்த மிருதளை சிந்தாம் முத்தளை யளவடி நாற்றளை நெடிலடி மிக்கன கழிநெடி லென்றிசி னோரே' |
என்றார் பிறருமெனக் கொள்க.] |
(12) |
---- |
|
(3) விரிவான பொருளை யாப்பருங்கல விருத்தியிரையிற் கண்டு கொள்ளுக' என்பது இத்தொடரின் பொருள்; காரிகை, 5-அடிக். (4) இச்சூத்திரம் தளையின் கணக்கைக் கொண்டு குறளடி முதலியவற்றை விளக்குகின்றது; பந்தம் - தளை. |
|
(பி - ம்.) 1. ரறுசீரதனி, னிழிபு நெடிலடி யென்றிசி னோரே. |