உறுப்பியல் 'திரைத்த விருது'

39

 
     அடிகளுக்கு உதாரண முதனினைப்பு
 
13. திரைத்த விருது குறள்சிந் தளவடி தேம்பழுத்து
விரிக்கு நெடிலடி வேனெடுங் கண்ணிவென் றான்வினையின்
இரைக்குங் கணிகொண்டமூவடி வோடிடங் கொங்குமற்றுங்
கரிக்கைக் கவான்மருப் பேர்முலை மாதர் கழிநெடிலே.
 
     இ - கை. அவ்வடிகளான் வந்த இலக்கியங்கட்கு முதனினைப் புணர்த்....று.

     திரைத்த விருது குறள் சிந்து எ - து :
 

வஞ்சித்துறை

'(1) திரைத்த சாலிகை
நிரைத்த போனிரைந்
திரைப்ப தேன்களே
விரைக்கொண் மாலையாய்'

(சூளா. சீயவதை. 172.)
 

     இது குறளடியான் வந்த செய்யுள்.
 

வஞ்சிவிருத்தம்

  'இருது வேற்றுமை யின்மையாற்
சுருதி மேற்றுறக் கத்தினோ
டரிது வேற்றுமை யாகவே
கருது1 வேற்றடங் கையினாய்'
 

(சூளா. சீயவதை. 170.)
 

     இது சிந்தடியான் வந்த செய்யுள்.
      'அளவடி தேம்பழுத்து' எ - து :
 

கலிவிருத்தம்

  '(2) தேம்பழுத் தினியநீர் மூன்றுந் தீம்பலா
மேம்பழுத் தளிந்தன சுளையும் வேரியும்
 

     (1) திரைத்த சாலிகை - சுருங்கிய கவசம். நிரந்து - வரிசையாகி. தேன்கள்
இரைப்ப - வண்டுகள் ஒலிப்ப. விரை - நறுமணம். மாலையில் படிந்துள்ள
வண்டுகளுக்கு மாலைக்கிடும் கவசம் உவமை.

      (2) இனியநீர் மூன்று - கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் என்னும் மூன்றும்
கலந்து ஊறிய நீர். அளிந்தன - கனிந்தனவாகிய. வேரி - தேன்.
 

     (பி - ம்.) 1. வேற்றடக்கையினாய். வேற்றடங் கண்ணினாய்.