| மாம்பழக் கனிகளு மதுத்தண் டீட்டமுந் தாம்பழுத் துளசில தவள மாடமே.' |
(சூளா. நகரச். 14.) |
இது அளவடியான் வந்த செய்யுள். |
'விரிக்கு நெடிலடி வென்றான் வினையின்' எ - து : |
விருத்தக் கலித்துறை |
| '(3) வென்றான் வினையின் 2றொகையாய விரிந்துதன்கண் ஒன்றாய்ப் பரந்த வுணர்வின் னொழியாது முற்றுஞ் சென்றான் றிகழுஞ் சுடர்சூழொளி மூர்த்தி யாகி நின்றா னடிக்கீழ்ப் பணிந்தார் வினைநீங்கி நின்றார்.' |
இது நெடிலடியான் வந்த செய்யுள். |
(சூளா. காப்பு.) |
'வேல்நெடுங் கண்ணி' எ - து. மகடூஉ முன்னிலை. |
'இரைக்குங் கணிகொண்ட மூவடி வோடிடங் கொங்கு மற்றும்.......கழிநெடிலே' எ - து : |
ஆசிரியவிருத்தம் |
| 'இரைக்கு மஞ்சிறைப் பறவைக ளெனப்பெய ரினவண்டு புடைசூழ |
| நுரைக்க ளென்னுமக் 3குழம்புக டிகழ்ந்தெழ நுடங்கிய விலயத்தால |
| திரைக்க ரங்களிற் செழுமலைச் சந்தனத் திரள்களைக கரைமேல்வைத் |
| தரைக்கு மற்றிது குணகடற் றிரையொடு பொருதல தவியாதே' |
(சூளா. கல்யாணச். 51.) |
என்பது அறுசீர்க் கழிநெடிலடியான் வந்த செய்யுள். |
|
(மதுத்தண்டு - கள்ளைப் பொதிந்து வைத்திருக்கும் மூங்கிற் குழாய்; 'நீடமை விளைந்த தேக்கட் டேறல்' (முருகு 195.) 'தழங்கு வெம்மதுத் தண்டும்' (சீவக. 863) தவளம் - வெண்மை. (3) வினையின் தொகை ஆய வென்றான் : வெங்கண் வினைப்பகை வினி வெய்த..... அருணெறி நடாத்திய வாதி' (கா. 9. மேற்.) 'திகழும் சுடர் சூழ் ஒளி மூர்த்தி': வெம்புஞ் சுடரிற் சுடருந் திருமூர்த்தி' (சீவக. 2); 'பரிதியி னொருதர னாகி.......உயர்ந்த அற்புத மூர்த்தி' (நன். சிறப். 3-5.) (4) இரைக்கும் - ஒலிக்கும். பறவைகள் : அறுகாற் பறவை என்பது வண்டுக்குப் பெயர். இலயம் - கலப்பு. இது கங்கையின் வருணனை. |
|
(பி - ம்.) 2. றொகை நீங்க, றொகையாக, றொகையாகி 3. குழம்பு கொண்டுதீர்ந்தெழ. |