அடிவரையறை |
| 14. வெள்ளைக் கிரண்டடி வஞ்சிக்கு மூன்றடி மூன்றகவற் கெள்ளப் படாக்கலிக் கீரிரண் டாகு மிழிபுரைப்போர் உள்ளக் கருத்தி னளவே பெருமையொண் 1போதலைத்த கள்ளக் கருநெடுங் கட்சுரி மென்குழற் காரிகையே. |
இ - கை. அவ்வடி வரையறையான் வந்த நான்கு பாவிற்கும் சிறுமை பெருமை உணர்த்......று. |
(1) 'வெள்ளைக்கு இரண்டடி இழிபு' எ - து. வெண்பாவிற்கு இரண்டடியே சிறுமை எ - று. |
'வஞ்சிக்கு மூன்றடி இழிபு' எ - து. வஞ்சிப்பாவிற்கு மூன் றடியே சிறுமை எ - று. |
'மூன்றகவற்கு இழிபு' எ - து. ஆசிரியப்பாவிற்கு மூன்றடியே சிறுமை எ - று. |
'எள்ளப்படாக் கலிக்கு ஈரிரண்டு ஆகும் இழிபு' எ - து. கலிப்பாவிற்கு நான்கடியே சிறுமை எ - று. |
['இழிபு' எ - து சிறுமை எ - று.] |
'உரைப்போர் உள்ளக் கருத்தின் அளவே பெருமை' எ - து. நான்கு பாவிற்கும் பெருமைக்கு எல்லை பாடுவோரது பொருண் முடிவு குறிப்பே, வரையறையில்லை எ - று. |
'ஒண் போது அலைத்த கள்ளக் கருநெடுங்கண் சுரிமென் குழல் காரிகையே' எ - து. மகடூஉ முன்னிலை. |
'எள்ளப்படாக் கலிக்கு' என்று சிறப்பித்தவதனால், (2) துள் ளலோசையிற் சிறிதும் வழுவாது நாற்சீர் நாலடியால் வருவது தரவு கொச்சகக் கலிப்பா என்றும், துள்ளலோசையிற் சிறிது |
|
(1) வெண்பா வெள்ளையென்றும் வழங்கப்படும் ; 'வெள்ளைச் செந்துறை' 'செந்துறை வெள்ளை' போன்ற பெயர்களைக் காண்க. (2) துள்ள லோசை சிறிதும் வழுவாது வருதல் - கலித்தளையே அமைந்து வருவது. |
|
(பி - ம்) 1. பேரதுலைத்த, போர்தொலைத்த |