46

யாப்பருங்கலக் காரிகை

 
     இது மூன்றடியான் ஆசிரியப்பாவிற்குச் சிறுமை வந்தவாறு.
 
  'குறையாக் கலியின திறத்தாறிது செல்வப்போர் எ - து :
'செல்வப்போர்க் கதக்கண்ணன்....பாய்ந்தொளித்ததே.'

(கா. 11. மேற்.)

     இது நான்கடியானே கலிப்பாவிற்குச் சிறுமை வந்தவாறு.
 
     'செங்கண் மேதி வஞ்சிச் சிறுமை' எ - து :
 
'(2) செங்கண்மேதி கரும்புழக்கி
அங்கணீலத் தலரருந்திப்
பொழிற்காஞ்சி நிழற்றுயிலுஞ்

செழுநீர்

 
நல்வயற் கழனி யூரன்
புகழ்த லானாப் பெருவண் மையனே.'
     இது தனிச்சொற் பெற்றுச் சுரிதகத்தான் இற்று மூன்றடியான் வஞ்சிப்பாவிற்குச்
சிறுமை வந்தவாறு.
 
     'புறத்தாழ் கருமென் குழல் திருவே அன்ன பூங்கொடியே'  எ - து மகடூஉ
முன்னிலை.
 

     முடிக்காரி என்றும் சொல்லப்படுவான் ; புறநா. 123, 158. ஒள்வேல் - ஒள்ளிய
வேலைப் போன்ற.

      (2) மேதி - எருமை. பொழிற் காஞ்சி - சோலையிலுள்ள காஞ்சி மரம். ஆனா -
அமையாத. தலைவனது பரத்தைமையை உள்ளுறை யுவமையால் விளக்கி அவனைப்
பழிப்பது இச்செய்யுள்.
 

----

தொடை
 

அடிமோனை முதலிய ஐந்து

  16. எழுவா யெழுத்தோன்றின் மோனை யிறுதி யியைபிரண்டாம்
வழுவா வெழுத்தொன்றின் மாதே யெதுகை மறுதலைத்த
மொழியான் வரினு முரணடி தோறு 1மொழிமுதற்கண்
அழியா தளபெடுத் தொன்றுவ தாகு மளபெடையே.
 
     அடிமோனை யிணைமோனை பொழிப்புமோனை ஒரூஉமோனை கூழைமோனை
மேற்கதுவாய்மோனை கீழ்க்கதுவாய்மோனை முற்று மோனை யெனவும்.
 

     (பி - ம்) 1. முதன் மொழிக்கண்.