உறுப்பியல் 'அந்த முதலாத் தொடுப்ப'

49

 
     கண் உயிரானும் ஒற்றானும் அளபெடுத்துத் தம்முள் ஒன்றிவரத் தொடுப்பது
அளபெடைத் தொடை எனப்படும் எ - று.
 
     'அழியாது' என்று மிகுத்துச் சொல்லியவதனால் நான்கு உயிரளபெடையும் இரண்டு
ஒற்றளபெடையும் தம்முள் ஒன்றி வரத் தொடுப்பது சிறப்புடைத்தென்று உணர்க.
தொடை விகற்பததுள் நான்கு உயிரளபெடையும் இரண்டு ஒற்றளபெடையும் தம்முள்
மறுதலைப்படத் தொடுப்பினும் இழுக்காது.
 
'முதலெழுத் தொன்றின் மோனை யெதுகை
முதலெழுத் தளவோ டொத்தது முதலா
அஃதொழித் 7தொன்றின வாகு மென்ப'
 
என்றார் பல்காயனார்.
 
  'இறுவா யொப்பினஃ தியைபென மொழிப'
என்றார் 8கையனார்.
 
'மொழியினும் பொருளினு முரணுதன் முரணே'
 
என்றார் தொல்காப்பியனார் (பொருள். சூ. 40,)
 
     'அளபெடைத் 9தொடைக்கே யளபெடை யொன்றும்' என்றார் 10நத்தத்தனாரும்
எனக் கொள்க.
 

(16)


     (பி - ம்.) 7. தொள்றினாகு, 8. காக்கை பாடினியார், மயேச்சுரர். 9. தொடையே.
10. நற்றத்தனார்.
 

----

அந்தாதி, இரட்டை, செந்தொடை

17. அந்த முதலாத் தொடுப்பதந் தாதி யடிமுழுதும்
வந்தமொழியை வருவ திரட்டை வரன்முறையான்
முந்திய மோனை முதலா முழுதுமொவ் வாதுவிட்டாற்
செந்தொடை நாமம் பெறுநறு மென்குழற் றேமொழியே.
 
     இ.....கை. அந்தாதித்தொடையும் இரட்டைத்தொடையும் செந்தொடையும் ஆமாறு
உணர்த்..று.
 
     அந்த முதலாத் தொடுப்பது அந்தாதி' எ - து. அடிதோறும், ஓரடி இறுதிக்கண்
நின்ற எழுத்தானும், அசையானும்,