| 'ஒருசொ லடிமுழுதும் வருவ திரட்டை' |
எனவுஞ் சொன்னார் மயேச்சுரர். |
| 'சொல்லிய தொடையொடு வேறுபட் டியலிற் சொல்லியற் புலவரது செந்தொடை என்பர்' |
என்றார் தொல்காப்பியனாரும் (பொருள். சூ. 412.) எனக் கொள்க. |
| 'அசையினுஞ் சீரினு 3மிசையினு மெல்லாம் இசையா தாவது செந்தொடை 4தானே' |
என்றார் 5காக்கை பாடினியார். |
(17) |
|
(பி - ம்.) 3. மடியினு. 4. யென்ப. 5. கையனார், பல்காயனார். |
---- |
தொடை விகற்பங்களுக்கு முதனினைப்பு |
| 18. மாவும்புண் மோனை யியைபின் னகைவடி யேரெதுகைக் கேவின் முரணு மிருள்பரந் தீண்டள பாஅவளிய ஓவிலந் 1தாதி யுலகுட னாமொக்கு மேயிரட்டை பாவருஞ் செந்தொடை பூத்தவென் றாகும் 2பணிமொழியே. |
இ.....கை. அடிமோனை முதலாகிய தொடைகளான் வந்த இலக்கியங்கட்கு முதனினைப் புணர்த்....று |
'மாவும் புள் மோனை' எ - து : |
ஆசிரியப்பா |
| (1) மாவும் புள்ளும் 3வதிவயிற் படர மாநீர் விரிந்த பூவுங் கூம்ப மாலை தொடுத்த கோதையுங் கமழ மாலை வந்த வாடை மாயோ ளின்னுயிர்ப் புறத்திறுத் தற்றே.' |
|
(1) மா - விலங்கு. வதி - வழி. விரிந்த பூ என்றது மாலைக் காலத்தில் குவியும் தாமரை முதலியவற்றை. கோதை இங்கே முல்லை மாலை. மாயோள் - மாமை நிறத்தை யுடையவள்; பெண்களுக்கு அழகைத் தருவது இந்நிறம். வாடை துயர்தருதல் : குறுந் 103, 110, 240, 277, 317, 332. |
|
(பி - ம்) 1. தாதிக்குலகுட 2. பனிமொழியே. 3. வதுவையிற், வரிவயிற். |