இஃது அடிதோறும் முதலெழுத்து ஒன்றிவரத் தொடுத்தமையான் அடிமோனைத் தொடை. |
`இயைபு இன்னகை' எ - து. |
ஆசிரியப்பா |
| `(2) இன்னகைத் துவர்வாய்க் கிளவியு மணங்கே நன்மா மேனிச் சுணங்குமா ரணங்கே ஆடமைத் 4தோளி யூடலு மணங்கே அரிமதர் மழைக்கணு மணங்கே திருதுதற் பொறித்த திலதமு மணங்கே.' |
இஃது அடிதோறும் 5 இறுதிச்சீர் ஒன்றிவரத் தொடுத்தமையான் அடியியைபுத் தொடை. |
`வடியேர் எதுகைக்கு' எ - து: |
வெண்பா |
| `(3)வடியேர்க ணீர்மல்க வான்பொருட்குச் சென்றார் கடியார் கனங்குழாய் காணார்கொல் காட்டுள் இடியின் முழக்கஞ்சி யீர்க்கவுள் வேழம் பிடியின் புறத்தசைத்த கை.' |
இஃது அடிதோறும் இரண்டாமெழுத்து ஒன்றிவரத் தொடுத்தமையான் அடியெதுகைத் தொடை. |
`ஏவின் முரணும் இருள் பரந்து' எ - து; |
| `(4) 6 இருள்பரந் தன்ன மாநீர் மருங்கின் நிலவுகுவித் தன்ன வெண்மண லொருசிறை இரும்பி னன்ன கருங்கோட்டுப் புன்னை பொன்னி னன்ன நுண்டா திறைக்குஞ் |
|
(2) கிளவி - சொல். அணங்கு - வருத்தம் தருவது சுணங்கு - தேமல். அமைத்தோளி - மூங்கிலைப்போன்ற தோள்களை யுடையவள். (3) வடி - மாவடுவின் பிளவு - கண் - தலைவியின் கண்கள். கவுள் - கன்னம். இடியோசை கேட்ட வேழம் பிடி நடுங்குமே என்று அஞ்சி அப்பிடியின் முதுகைத் தடவியது. சென்றார், கை காணார் கொல். (4) மாநீர் - கடல். அணங்கு - வருத்திக் கொல்லும் தெய்வமகள், |
|
(பி - ம்.) 4. தோளிக்கூடலு தோளிகூடலு. 5. இறுதிச் சீர்க்கண் நின்ற எழுத்தானுஞ் சொல்லானும். 6. இருள்விரிந். |