இது (7) நான்கு 12 அந்தாதித் தொடையும் வந்த செய்யுள். |
'ஒக்குமே யிரட்டை' எ - து : |
சிந்தியல் வெண்பா |
| '(8) ஒக்குமே யொக்குமே யொக்குமே யொக்கும் விளக்கினுட் சீறெரி யொக்குமே யொக்கும் குளக்கொட்டிப் பூவி னிறம்.' |
இஃது ஓரடி முழுதும் ஒருசொல்லே வரத் தொடுத்தமையான் இரட்டைத் தொடை. |
இறுதிச்சீர் ஏகாரத்தாற் குறைபடினும் இழுக்காது, இது நாற்சீரின் மிக்கு வரப்பெறாதெனக் கொள்க. |
'பாவரும் செந்தொடை பூத்தவென்றாகும்' எ - து : |
ஆசிரியப்பா |
| '(9) பூத்த வேங்கை வியன்சினை யேறி மயிலின மகவு நாடன் நன்னுதற் கொடிச்சி மனத்தகத் தோனே.' |
இது மோனை முதலாகிய தொடையுந் தொடை விகற்பமும் போலாமை வேறுபடத் தொடுத்தமையாற் செந்தொடை. |
'பணி மொழியே' எ - து. மகடூஉ முன்னிலை. |
(18) |
---- |
|
(7) நான்கு அந்தாதித் தொடை : எழுத்தானும், அசையானும், சீரானும் அடியானும் வந்த நான்குமாம். (8) கொட்டிப்பூவின் நிறம் சிறிய எரி ஒக்கும். (9) கொடிச்சி - குறிஞ்சிநிலப் பெண். இச்செய்யுள் தொடை விகற்பமங்களுள் ஒன்றையும் பெறாமல் அகவலோசையோடு இயைந்து ஆசிரியப்பா ஆனவாறு காண்க. |
|
(பி - ம்.) 12. அந்தாதியும். |