56      யாப்பருங்கலக் காரிகை
 
என்றும் ஈயற்றற்சீர்க்கண் இன்றி ஒழிந்த மூன்று சீர்க்கண்ணும் மோனை முதலாயின
ஐந்தும் வரத்தொடுப்பது கீழ்க்கதுவாய் என்றும் வழங்கப்படும் எ - று.
 
     இது நிரனிறை எனக் கொள்க. என்னை?
 
  'கடையயன் முதலயல் கதுவாய் கீழ்மேல்'
 
என்றார் 3அவிநயனார்.
 
     முதலயற் சீர்க்கண் இல்லாததனைக் கீழ்க்கதுவாய் என்றும், ஈற்றயற் சீர்க்கண்
இல்லாததனை மேற்கதுவாய் என்றும் 4 வேண்டினார் கையனார் முதலாகிய ஒருசார்
ஆசிரியர் என்பது அறிவித்தற்கு, 'மைதீர் கதுவாய்' என்று விதப்புரைத்தாரெனக்
கொள்க.
 
     'வருசீர் முழுவதும் ஒன்றின் முற்றாம்' எ - து 5 நான்கு சீர்க்கண்ணும் மோனை
முதலாயின ஐந்தும் வரத் தொடுப்பது முற்றுத் தொடை எனப்படும் எ - று.
 
     'மற்றவையே' என்பது இறுதி விளக்கெனக் கொள்க.
 
     'சீர் முழுவதும் ஒன்றின் முற்றாம்' என்னாது 'வருசீர் முழுவதும்' என்று
சிறப்பித்தது, இணைமோனை முதலாகிய (3) முப்பத்தைந்து தொடை விகற்பமும்
அளவடிக் கண்ணே இவ்வாறு வழங்கப்படும் என்பதூஉம், இணையியைபு முதலாகிய
விகற்பமும் இறுதிச்சீரே முதற்சீராகக் கொண்டு வழங்கப்படும் என்பதூஉம்
அறிவித்தற்கெனக் கொள்க.
 
     இயைபுத் தொடைக்கு ஏழு விகற்பமும் இறுதிச்சீர் முதலாகக் காட்டினார்
கையனார் முதலாகிய ஒரு சார் ஆசிரியரெனக் கொள்க.
 

     (3) முப்பத்தைந்து தொடை விகற்பமாவன : மோனை, எதுகை, முரண், இயைபு,
அளபெடை என்னும் ஐந்தனுள் ஒவ்வொன்றும் இணை, பொழிப்பு, ஒரூஉ, கூழை,
மேற்கதுவாய், கீழ்க்கதுவாய், முற்று என்னும் ஏழனோடும் உறழ மொத்தத்தில் (7 x 5 =
35) முப்பத்தைந்தாதல் காண்க. இவற்றினோடு அடிமோனை முதலிய ஐந்தும் அந்தாதி,
இரட்டை, செந்தொடை என்ற மூன்றும் கூட்டத் தொடை விகற்பங்கள் நாற்பத்து
மூன்றாயின என்க.
 

     (பி - ம்.) 3. பிறருமெனக் கொள்க. 4. சொன்னார், வழங்குவர். 5. எல்லாச்
சீர்க்கண்ணும்.