6

யாப்பருங்கலக் காரிகை

அடுத்து நடத்தலி னடியே யடியிரண்டு
20 தொடுத்துமன் சேறலிற் றொடையே யத்தொடை
பாவி நடத்தலிற் பாவே பாவொத்
தினமாய் நடத்தலி னினமெனப் படுமே'
 
21 என்றார் ஆகலின்.
 
பந்தம் எனினும் தளை எனினும் ஒக்கும். என்னை?
'பகுத்தெதிர் நிற்றலிற் பந்தந் தளையென
வகுத்தனர் மாதோ வண்டமி ழோரே'
என்றார் ஆகலின்.
 
     'பல்லவத்தின் சந்த மடிய அடியான் மருட்டிய தாழ்குழலே' என்பது பகடூஉ
முன்னிலை.
 
     ஏகாரம் ஈற்றசை யேகாரம்.
 

(1)

அவையடக்கம்

  2. (1) தேனார் கமழ்தொங்கன் மீனவன் கேட்பத்தெண் ணீரருவிக்
கானார் மலயத் தருந்தவன் சொன்னகன் னித்தமிழ்நூல்
யானா நடாத்துகின் றேனென் (2) றெனக்கே நகைதருமால்
ஆனா வறிவி னவர்கட் கென் னாங்கொலென் னாதரவே.
 
     இ - கை. 1 நூலினது பெருந்தன்மையும் ஆசிரியனது பெருந் தன்மையும் தனது
உள்ளக் குறைபாடும் உணர்த்திய முகத்தான் அவையடக்கம் உணர்த்.....று.
 
     [தேன் நிறைந்த மணங்கமழ்கின்ற வேப்ப மாலையைத் தரித்த பாண்டியன்
கேட்கத் தெளிந்த அருவி நீரையுடைய சந்த
 

     (1) மீனவன் பாண்டியன்; கேட்ப - கேட்கத் தக்கதாக. கன்னி - அழிவின்மை.
நூல் - இலக்கணம். நடாத்துதுல் - நிகழ்த்துதல் ; 'நவநீத னடத்தினனே' (நவநீதப்
சிறப்.). என் ஆதரவு எனக்கே நகைதரும்; அறிவின் அவர்கட்கு என்னாங் கொல்?'
பாண்டியன் அகத்தியர்பால் நூல் கேட்டமை அன்றகத்தியன்வாய் உரைதரு தீந்தமிழ்
கேட்டோன்' (பாண்டிக்.)

     (2) 'நன்னா வலர்முக நகைநாணாமே, என்னாலியன்றவை யியற்று மிந்நூலுன்'
(நன். சங்கர, உரைச்சிறப. 15-6)
 

     (பி - ம்.) 20. தொடுத்தன் முதலாயின. 21. எனவரும். : நூற்சிறப்பும் ஆசிரியரது.