| 'ஏந்திசைத் துள்ளல் கலித்தளை யியையின்,' 'வெண்டளை தன்றளை 5யென்றிவை யியையின் ஒன்றிய வகவற் றுள்ளலென் றோதுப.' 'தன்றளை பிறதளை யென்றிவை யனைத்தும் 7 பொருந்தி வரினே பிரிந்திசைத் துள்ளல்.' |
[இவற்றுக்குச் செய்யுள் : |
தரவு கொச்சகக் கலிப்பா |
| '(3) முருகவிழ்தா மரைமலர்மேன் முடியிமையோர் புடைவரவே வருசினனார் தருமறைநூல் வழிபிழையா மன முடையார் இருவினைபோய் விழமுனியா வெதிரியகா தியை8யரியா நிருமலரா 9யறிவினராய் நிலவுவர்சோ தியினிடையே.' |
இது கலித் தளையான் வந்தமையால் ஏந்திசைத்துள்ள லோசை |
| 'செல்வப்போர்க்...........தொளித்ததே. |
(கா. 11. மேற்.) |
இது வெண்சீர் வெண்டளையும் கலித்தளையும் விரவி வந்தமை யால் அகவற்றுள்ளலோசை. |
வஞ்சிப்பா |
| (4) 'குடநிலைத் தண்புறவிற் கோவல ரெடுத்தார்ப்பத் தடநிலைய பெருந்தொழுவிற் றகையேறு மரம்பாய்ந்து வீங்குமணிக் கயிறொரீஇத் தாங்குவனத் 10தேறப்போய்க் கலையினொடு முயலிரியக் கடிமுல்லை முறுவலிப்ப, எனவாங்கு, |
|
3. சினனார் - அருகபரன், காதி - முத்திக்குப் பாதகமாக உள்ள கர்மங்கள்; அவை ஞானாவரணீயம், தரிசனாவரணீயம், போகநீயம், அந்தராயம் என்பன. மனமுடையார் சோதி யி னிடையே நிலவுவர். 4. குடம் - கண்ணனாடிய குடக்கூத்து; தயிர்த்தாழியுமாம். புறவு - முல்லை நிலம். மரம் - உழலைமரம், சீவக. 422, 713, 1226. காளைகளுக்கு மணிகட்டுதல் மரபு. ஆன் - பசு, ஏறு ஆர்ப்ப, பாய்ந்து, ஒரீஇ, ஏறப்போய், புல்லி முனையும் கான். இது தோழி தலைவியை ஆற்றுவித்தது. |
|
(பி - ம்.) 6. யென்றிரண்டியையின். 7. பிரிந்து. 8. யெறியா. 9. யருவினராய். 10. தொன்றப் |