அடி நிரம்பிச் செப்பலோசை வழுவாது முதலிரண்டடியும் ஒரு விகற்பமாய்க் கடையிரண்டடியும் மற்றொரு விகற்பாய் வரினும் நான்கடியும் ஒரு விகற்பாய் வரினும் அவை இருகுற ணேரிசை வெண்பா எனப்படும். எ - று. என்னை? |
| 'குற்றிய லுகர 3முதற்குறள் வெண்பா முற்றி னிருகுற ணேரிசை யாகும்' |
என்றார் ஆகலின். |
வரலாறு |
| '(4) தடமண்டு தாமரையின் றாதா டலவன் இடமண்டிச் செல்வதனைக் கண்டு - பெடைஞெண்டு பூழிக் கதவடைக்கும் புத்தூரே பொய்கடிந் தூழி நடாயினா னூர்.' '(5) அரிய வரைகீண்டு காட்டுவார் யாரே பெரிய வரைவயிரங் கொண்டு - தெரியிற் கரிய வரைநிலையார் காய்ந்தாலென் செய்வார் பெரிய வரைவயிரங் கொண்டு.' |
இவை இரண்டு குறள் வெண்பாவாய் நடுவு முதற்றொடைக் கேற்ற தனிச்சொல்லால் அடிநிரம்பிச் செப்பலோசை வழுவாது இருவிகற்பத்தானும் ஒரு விகற்பத்தானும் வந்தமையால் இருகுற ணேரிசை வெண்பா. |
வான் றனிச் சொல்' என்று சிறப்பித்தவதனால் முதற் குறட்பாவினோடு தனிச்சொல் இடை வேறுபட்டு விட்டிசைப் பின், ஒற்றுமைப்படாத உலோகங்களை ஒற்றுமைப்படப் (6) பற்றாசிட்டு விளக்கினாற்போல, முதற் குறட்பாவின் இறுதிக் |
|
(4) தடம் - குளம். தாது - பூந்தாது. அலவன் - ஆண் நண்டு. பூழிக், கதவு - புழுதியாகிய கதவு. பெடை புலந்து கதவடைத்தது. ஊழிநடாயினான் - ஊழிக்காலம்வரை ஆணை செலுத்துபவன். (5) வரைகீண்டு - மலையைக் கல்லிப் பெயர்த்து. வரை வயிரம் - வயிரம் பற்றிய மூங்கில். (6) பற்றாசு - பொற்கொல்லர் நகைகளுக்கு இடும் பொடி; இராசி எனவும் படும். |
|
(பி - ம்.) 3. விறுதி முதற்குற, ளுற்றிடி னிருகுற ணேரிசை வெண்பா. |