செய்யுளியல் 'ஒன்றும் பலவும்'

77

 
வும் எல்லாம் இன்னிசை வெண்பா என்று பெயரிட்டு வழங்கப்படும் எ - று.
 
'(5) அங்கண் விசும்பி னகனிலாப் பாரிக்குந்
திங்களுஞ் சான்றோரு மொப்பர்மற் - றிங்கண்
மறுவாற்றுஞ சான்றோரஃ தாற்றார் தெருமந்து
தேய்வ ரொருமா சுறின்.'

(நாலடி, 151.)
 

'(6) மலிதேரான் கச்சியு மாகடலுந் தம்மில்
ஒலியும் பெருமையு மொக்கும் - மலிதேரான்
கச்சி படுவ கடல்படா கச்சி
கடல்படுவ வெல்லாம் படும்,'
 
     இவை இரண்டாமடியின் இறுதி தனிச்சொற் பெற்று மூன்று விகற்பத்தான் வந்த
இன்னிசை வெண்பா.
 

 
'வளம்பட ................... செய்தாரு மில்.'
 

(கா. 22, மேற்.)
 

     இது மூன்றாமடியின் இறுதி தனிச்சொற் பெற்று இரண்டு விகற்பத்தான் வந்த
இன்னிசை வெண்பா.
 
'(7) மழையின்றி மாநிலத்தார்க் கில்லை மழையும்
தவமிலா ரில்வழி யில்லைத் தவழும்
அரசிலா னில்வழி யில்லை யரசனும்
இல்வாழ்வா ரில்வழி யில்.' (நான்மணி. 48.)
 
     இஃது அடிதோறும் ஒரூஉத்தொடை பெற்று நேரிசை வெண்பாவிற் சிறிது
வேறுபட்டு வந்த இன்னிசை வெண்பா.
 
     பிறவும் வந்தவழியே கண்டுகொள்க.
 
'தனிச்சொற் றழுவல வாகி விகற்பம்
பலபல தோன்றினு மொன்றே வரினும்
இதன்பெய ரின்னிசை யென்றிசி னோரே'
 

     (5) பாரிக்கும் - பரப்பும். தண்ணளியே பாரித்தலால் சான்றோரும் அன்னர். மன்:
மிகுதிப்பொருளில் வந்த இடைச்சொல். தெருமந்து - மயங்கி,

      (6) கச்சியில் கடல்படு திரவியமேயன்றி வேறு நிலங்களின் பொருள்களும் உள
என்றபடி.

      (7) சில பிரதிகளில் இச்செய்யுளுக்குப் பிரதியாக 'இன்னாமை
வேண்டி......வெகுளிவிடல்' (நான்மணி. 17.) என்ற செய்யுளும், 'இஃது அடிதோறும்
தனிச்சொற் பெற்றுவந்த இன்னிசை வெண்பா' என்ற தொடரும் காணப்படுகின்றன.