| 'ஒருவிகற் பாகித் தனிச்சொ லின்றியும் இருவிகற் பாகித் தனிச்சொ லின்றியுந் தனிச்சொற் பெற்றுப் பலவிகற் பாகியுந் தனிச்சொ லின்றிப் பலவிகற் பாகியும் அடியடி தோறு மொரூஉத்தொடை யடைநவும் எனவைந் தாகு மின்னிசை தானே' |
என்றார் பிறருமெனக் கொள்க. |
'அடிபலவாய்ச் சென்று நிகழ்வது பஃறொடையாம்' எ - து நான்கடியின் மிக்க பலவடியால் வருவது பஃறொடை வெண்பா எனப்படும் எ - று. |
நேரிசை வெண்பாவிற்கும் இன்னிசை வெண்பாவிற்கும் நான்கடியே உரிமை சொன்னமையால் 'நான்கடியின் மிக்க வடியான் வருவது' என்பது (8) ஆற்றலாற் போந்த பொருளெனக் கொள்க. |
| 'வையக மெல்லாங் கழனியா வையகத்துச் செய்யகமே 4நாற்றிசையின் றேயங்கள் செய்யகத்து வான்கரும்பே தொண்டை வளநாடு வான்கரும்பின் சாறேயந் நாட்டுத் தலையூர்கள் சாறட்ட கட்டியே கச்சிப் புறமெல்லாங் கட்டியுட் டானேற்ற மாய சருக்கரை மாமணியே ஆனேற்றான் கச்சி யகம்' |
இஃது அடிதோறும் ஒரூஉத்தொடை பெற்றுப் பல விகற்பத்தால் வந்த ஏழடிப் பஃறொடை வெண்பா. |
| '(9) சேற்றுக்கா னீலஞ் செருவென்ற வேந்தன்வேல் கூற்றுறழ் மொய்ம்பிற் பகழி பொருகயல்' |
|
(8) ஆற்றலாற் போந்த பொருள் - புத்தி நுட்பத்தினாற் கொண்ட பொருள்; 'செய்வேனோ என்பது வினாதல்; இவ்வோகார இடைச் சொற்கு எதிர்மறை முதலிய பொருள் விலக்கி ஆற்றலால் வினாப் பொருளே கொள்க' (நன். சூ. 386, சங்கர) (9) மாவடர்கண் - மாவடுவைப் பொருத கண். ஆற்றுக்கால் ஆட்டியர் - மருதநிலப் பெண். ஆட்டியர் மாவடர் கண்கள் நீலம் வேல் பகழி கயல் இவைகளோடு தோற்றம் தொழில் வடிவு தடுமாற்றம் என்னும் இவைகளில் ஒத்தன. |
|
(பி - ம்.) 4. நாற்றிசையுட் டேயங்கள் |