8

யாப்பருங்கலக் காரிகை

எழுத்து

4. குறினெடி லாவி குறுகிய மூவுயி ராய்தமெய்யே
மறுவறு மூவின மைதீ ருயிர்மெய் மதிமருட்டுஞ்
சிறுநுதற் பேரமர்க் கட்செய்ய வாயைய நுண்ணிடையாய்
அறிஞ ருரைத்த 1வளபு மசைக்குறுப் பாவனவே.
 
     இ-கை. மேலதிகாரம் பாரித்த (1) எட்டனுள்ளும் அசைக்கு உறுப்பாம்
2எழுத்துக்களது பெயர் வேறுபாடு உணர்த்....று.
 
     குறிலாவன : அ இ உ எ ஓ என இவை. என்னை?
 
  'அ இ உ,
எ ஒ என்னும் மப்பா லைந்தும்
ஓரள பிசைக்குங் குறிறெழுத் தென்ப'
 

(தொல். எழுத். சூ. 3.)

என்றார் ஆகலின். (2)
 
     நெடிலாவன : ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள என இவை. என்னை?
 
  'ஆ ஈ ஊ ஏ ஐ,
ஓ ஒள வென்னு மப்பா லேழும்
ஈரள பிசைக்கு நெட்டெழுத் தென்ப'

(தொல். எழுத். சூ. 4.)

என்றார் ஆகலின்.
 
     ஆவியாவன: அகரமுதல் ஒளகார மீறாய்க் கிடந்த பன்னிரண் டெழுத்தும் எனக்
கொள்க. ஆவி யெனினும் உயிர் எனினும் 3ஒக்கும். என்னை?
 

     'பொன்னிறப் புறவுங் ககுநிறக் காக்கையும், மன்னுமா லிமய வரைப்புறஞ்
சேர்ந்துழி, இருதிறப் பறவைக்கு மொரு திறனல்லதை, நிறம்வேறு தெரிப்ப துண்டோ'
(குமர குருபர. 455. 24-7.)

     (1) எட்டாவன : எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை, பா, இனம் என்பன.

     (2) 'எகர ஒகரங்கள் புள்ளிபெற் றியலு மென்றார் அகத்தியனார்' என்ற தொடர்
பலபிரதிகளில் இங்கே காணப்படுகிறது. வேறு சில பிரதிகளில் இத்தொடர் 'அகரமுதல்'
என்ற சூத்திரத்தின் பின் காணப்படுகிறது
 

     (பி - ம்.) 1. வளவு. 2. என்ற எழுத்துக்களது. 3. ஒக்கும், 'ஆவிதானே யுயிரெனப்
படுமே' என்றாராகலின்.