வொத்து வருவது 1வெண்செந்துறை என்றும் செந்துறை வெள்ளையென்றும் பெயரிட்டு வழங்கப்படும் எ - று. |
'அந்தமில் பாதம்' என்று சிறப்பித்தவதனால் (1) விழுமிய பொருளும் ஒழுகிய வோசையு முடைத்தாய் வருவது எ - று. என்னை? |
| 'ஒழுகிய வோசையி னொத்தடி யிரண்டாய் விழுமிய பொருளது வெண்செந் துறையே' |
என்பது யாப்பருங்கலம் (சூ. 63.) |
வரலாறு |
| 'ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் ஓதலிற் சிறந்தன் றொழுக்க முடைமை.' (முதுமொழிக்.) 'கொன்றை வேய்ந்த செல்வ 2னடியிணை என்றுமேத்தித் தொழுவோ மியாமே.' (கொன்றைவேந்தன்) |
இவை இரண்டடியாய் அளவொத்து ஒழுகிய ஓசையும் விழுமிய பொருளுமுடைத்தாய் வந்த வெண்செந்துறை. |
'திருவே' எ - து மகடூஉ முன்னிலை. |
'சீர் பலவாய் அந்தம் குறைநவும் செந்துறைப் பாட்டின் இழிபும் அங்கேழ் சந்தம் சிதைந்த குறளும் குறளினத் தாழிசையே' எ - து. நாற்சீரின் மிக்க பலசீரால் வந்த அடி இரண்டாய் ஈற்றடி குறைந்து வருவனவும், செந்துறை வெள்ளையிற் சிதைந்து வருவனவும், குறள் வெண்பாவிற் சிறிது செப்பலோசை சிதைந்து வருவனவும் குறள் வெண்பாவிற்கு இனமாகிய குறட்டாழிசை எனப்படும் எ - று. |
குறட்டாழிசை எனினும் தாழிசைக் குறள் எனினும் ஒக்கும். இரண்டடி என்பது (2) அதிகாரத்தான் வருவித் |
|
(1) விழுமிய பொருள் - சிறந்த பொருள். ஒழுகிய ஓசை - தட்டுத லில்லாத சீரிய ஓசை. (2) குறட்பாவின் இனத்தைக் கூறுவது இங்கே அதிகாரம். குறட்பாவுக்கு அடியிரண்டாயினாற் போல அதன் இனங்கட்கும் இரண்டடியே கொள்ள வேண்டும் என்பது. அதிகாரம் இன்னதென்பது: (கா. 8. அடிக். 1) |
|
(பி - ம்.) 1. குறள்வெண் செந்துறை. 2. னிணையடி |