88

யாப்பருங்கலக் காரிகை

 

வரலாறு

'(1) கொண்டன் முழங்கினவாற் கோபம்
பரந்தனவால் - என்செய்கோயான்

வண்டு வரிபாட வார்தளவம்
பூத்தனவால் - என்செய்கோயான்

எண்டிசையுந் தோகை 2யியைந்தகவி
யேங்கினவால் - என்செய்கோயான்,
 
     இது மூன்றடியாய் அடிதோறும் இறுதிக்கண் 'என்செய் கோயான்' என்னுந் தனிச்
சொற் பெற்று வந்த வெளி விருத்தம்.
 
  '(2) ஆவா வென்றே யஞ்சின 3ராழ்ந்தார் - ஒருசாரார்.
கூகூ வென்றே கூவிளி கொண்டார் - ஒருசாரார்
மாமா வென்றே மாய்ந்தனர் நீத்தார் - ஒருசாரார்
4 ஏகீர் நாய்கீ ரென்செய்து மென்றார் - ஒருசாரார்.'
 

     இது நாலடியாய் அடிதோறும் இறுதிக்கண் 'ஒரு சாரார்' என்னுந் தனிச் சொற்
பெற்று வந்த வெளி விருத்தம்.
 

     'வெண்டாழிசையே மூன்றடியாய் வெள்ளை போன்றிறும்' எ - து. மூன்றடியாய்
அவற்றின் ஈற்றடி வெண்பாவே போல முச் சீரான் இறுவது வெண்டாழிசை யென்றும்,
வெள்ளொத்தாழிசை யென்றும் பெயரிட்டு வழங்கப்படும். எ - று.
 

  'அடியொரு மூன்றுவந் தந்தடி சிந்தாய்
விடினது வெள்ளொத் தாழிசை யாகும்'
 
என்பது யாப்பருங்கலம் (சூ : 66)
 

     (1) கோபம் - இந்திர கோபப் பூச்சி. வரி - இசை. தளவம் - செம்முல்லை.
தலைவி பருவங் கண்டு வருந்தியது இது. மூன்றடியான் வந்தமையால் சிந்தியல்
வெண்பாவின் இனம் இது.

      (2) ஆவா இரக்கங் குறித்து வந்தது. கூவிளி - கூப்பீடு. நாய்கீர் - வணிகரே.
நான்கடியாய்த் தனிச்சொற் பெற்று வந்தமையால் இது நேரிசை வெண்பாவின் இனம்,
 

     (பி - ம்.) 2. யிருந்தகவி, யிசைந்தகவி. 3. ராழாவொரு 4. ஏயீர்நாய்கீர்.