| வரலாறு |
| | 'நண்பி தென்று தீய சொல்லார் முன்பு நின்று முனிவ செய்யார் அன்பு வேண்டு பவர்.' |
| 5இஃது ஆசிரியத் தளையால் வந்த வெண்டாழிசை. |
'மூன்றிழிபு ஏழு உயர்பாய் ஆன்றடிதாம் சில அந்தங் குறைந் திறும் வெண்டுறையே' எ-து. மூன்றடிச் சிறுமையாய் ஏழடிப் பெருமையாய் இடையிடை நான்கடியானும் ஐந்தடியானும் ஆறடி யானும் வந்து, பின்பிற் சிலவடி சிலசீர் குறைந்துவருவன வெண் டுறையாம் எ - று. |
'ஆன்றடிதாம்' என்று சிறப்பித்தவதனால் முன்பிற் சிலவடி ஓரோசையாய்ப் பின்பிற் சிலவடி மற்றோர் ஓசையாய் வருவனவும் உள. அஃது ஒரு சார் வேற்றொலி வெண்டுறை எனக் கொள்க. |
| | 'மூன்றடி முதலா வேழடி காறும்வந் தீற்றடி சிலசில சீர்தப நிற்பினும் வேற்றொலி விரவினும் வெண்டுறை யாகும்' |
என்பது யாப்பருங்கலம் (சூ - 67.) |
| வரலாறு |
| | (3) குழலிசைய வண்டினங்கள் கோழிலைய செங்காந்தட் குலை மேற்பாய அழலெரியின் மூழ்கினவா லந்தோ வளியவென் றயல்வாழ் மந்தி கலுழ்வனபோ 6னெஞ்சழிந்து கல்லருவி தூஉம் நிழல்வரை நன்னாட 7னீப்பானோ வல்லன்.' |
|
(3) இசைய - இசையையுடைய கோழ்இலைய - வழுவழுப்பான இலைகளையுடைய. அழல் எரி - அழலுகின்ற தீ. அளிய - இரங்கத்தக்கன. காந்தள் மலரை மந்திகள் தீயென்று மயங்கின. நான்கடி வெண்டுறையாதல் பற்றி இது இன்னிசை வெண் பாவின் இனம். ஐந்தடி முதலாக ஏறிய அடிகளையுடைய வெண்டுறைகள் பஃறொடை வெண்பாவின் இனம். |
|
(பி - ம்.) 5. இது மூன்றடியாய் ஆசிரியத் தளையால் வந்து சிந்தியல் வெண்பாவிற் சிதைந்தமையால் வெண்டாழிசை. பிறவும் வந்தவாறு கண்டு கொள்க. 6. நெஞ்சசைந்து, 7. நிற்பானோ |