உறுப்பியல் 'குறினெடிலாவி'

9

 
  (3) அகரமுத லௌகார விறுவாய்ப்
பன்னீ ரெழுத்து முயிரென மொழிப'
 
என்றார் ஆகலின்.
 
     குறுகிய மூவுயிராவன : குற்றியலிகரமும் குற்றிய லுகரமும் ஐகாரக் குறுக்கமும் என
இவை. [என்னை?
 
'அவைதாம், குற்றிய லிகரமுங் குற்றிய லுகரமும்
ஆய்த மென்ற முப்பாற் புள்ளியும் எழுத்தோ ரன்ன'
 
என்றார் ஆகலின்.] இவை மேலே சொல்லுதும்.
     ஆய்தமென்பது அஃகேனம். அஃகேனம் எனினும், ஆய்தம் எனினும், தனிநிலை
எனினும், புள்ளி எனினும், ஒற்றெனினும் ஒக்கும். என்னை?
 
  'அஃகேன மாய்தந் தனிநிலை புள்ளி
ஒற்றிப் பால வைந்து மிதற்கே'
 
என்றார் ஆகலின்.
 

வரலாறு

     எஃகு, கஃசு, கஃடு, கஃது, கஃபு, கஃறு எனவரும். (5) என்னை?
 
  'குறியதன் முன்ன ராய்தப் புள்ளி
உயிரொடு புணர்ந்தவல் லாறன் மீசைத்தே'
 

என்றார் ஆகலின்.
 

(தொல். எழுத். சூ. 38.)

மெய்யாவன : ககர முதல் னகர ஈறாய்க் கிடந்த பதினெட் டெழுத்தும் எனக் கொள்க.
என்னை?
 

     (3) 'அகரமுதல்' என்ப சில சுவடிகளில் இல்லை; தொல். எழுத். சூ. 8 அங்ஙனமே
அமைந்துள்ளது.

     (4) ஒரு பிரதியில் 'என்றார் மயேச்சுரர்' என்று காணப்படுகிறது. இஃது
அவிநயனார் சூத்திரம் என்று கூறுவர் : யா. வி. சூ. 2. மேற்.

     (5) இதன் பின் சில பிரதிகளில் 'அதுவும் சார்பிற் றோன்றும்' எழுத்து;