'கடை அயல் பாதம் முச்சீர் வரின் நேரிசை' எ - து. 1ஈற்றடி யின் அயலடி முச்சீரான் வரும் எனின் அது நேரிசை யாசிரியப்பா எனப்படும் எ - று. என்னை? |
| '(2) அந்த வடியி னயலடி சிந்தடி வந்தன நேரிசை யாசிரி யம்மே' |
என்பது யாப்பருங்கலம் (சூ. 71). |
வரலாறு |
| (3) 'நிலத்தினும் பெரிதே வானினு முயர்ந்தன்று நீரினு மாரள வின்றே சாரற் கருங்கோற் குறிஞ்சிப்பூக் கொண்டு பெருந்தே னிழைக்கு நாடனொடு நட்பே.' (குறுந். 3) |
இஃது 2ஈற்றடியின் அயலடி முச்சீரான் வந்தமையால் நேரிசை யாசிரியப்பா வெனக் கொள்க. |
'காமரு சீர் இடை பல குன்றின் இணைக்குறள்' எ - து. முதலடி யும் ஈற்றடியும் ஒத்து இடையடிகள் 3இரண்டும் பலவும் ஒருசீர் குறைந்தும் இருசீர் குறைந்தும் வருவன (4) இணைக்குறளா சிரியப்பா எனப்படும் எ - று. என்னை? |
| 'அளவடி யந்தமு மாதியு 4மாகிக் குறளடி சிந்தடி 5யென்றாங் கிரண்டும் இடைவர நிற்ப திணைக்குற ளாகும்' |
என்றார் காக்கை பாடினியார். |
|
(2) பல பிரதிகளில் இப்பகுதி. 'ஈற்றதனயலடி யொருசீர் குறைந்து, நிற்பது நேரிசை யாசிரியம்மே என்றாராகலின்' என்று காணப்படுகிறது. 'ஒருசீர் குறைந்து' என்பதற்கு, 'முச்சீராக' என்பது பிரதிபேதம். (3) நீர் - கடல். ஆர் அளவின்று - அருமை அளவின்று. சாரல் - மலைப் பக்கம். கோல் - கொம்புகள். தேன் இழைக்கும் - தேனைச் செய்யும். (4) நாற்சீரினும் குறைந்த சீரையுடைய சிந்தடியையும் குறளடியையும் இங்கே குறள் என்றார். இணை - இரண்டு. இணைக்குறள் - குறளடியும் சிந்தடியுமாகிய இரண்டு. |
|
(பி - ம்.) 1. ஈற்றயலடி. 2. ஈற்றயலடி. 3. ஒருசீரும் இருசீரும் குறைந்து வருவன. 4. மாகக். 5. யென்றா விரண்டும். |