செய்யுளியல் 'கடையயற் பாதமுச்'

95

 
     'காமரு சீர்' என்று சிறப்பித்தவதனால் ஆசிரியப்பா நான்கிற்கும் ஏ என்னும்
அசைச்சொல்லால் இறுவது சிறப்புடைத்து, பிறவெழுத்தானும் 6இறப்பெறு மாயினும் எனக்
கொள்க.
 
 

'அகவ லிசையன வகவல் மற்றவை
ஏஓ ஈஆய் என்ஐயென் றிறுமே' (யா. வி. சூ. 67.)
 

7 என்றாராகலின்.
 

     'எல்லாவடியும் ஒத்து நடைபெறுமாயின் நிலைமண்டிலம்' எ - து. எல்லாவடியும்
தம்முள் ஒத்து நாற்சீரடியான் வருவது நிலைமண்டில வாசிரியப்பாவாம் எ - று.
 

வரலாறு

  ' (6) வேரல் வேலி வேர்க்கோட் பலவின்
சார னாட செவ்வியை யாகுமதி
யாரஃ தறிந்திசி னோரே சாரற்
சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கி யாங்கிவள்
உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே.'
 

(குறுந். 18.)
 

     இஃது எல்லாவடியும் ஒத்து நான்குசீரான் வந்தமையால் நிலைமண்டில
வாசிரியப்பாவெனக் கொள்க.
 
     நிலைமண்டில வாசிரியப்பாவிற்கு என் என்னும் அசைச் சொல்லால் இறுவது
சிறப்புடைத்து, மற்றொருசார் ஒற்றினானும் உயிரினானும் இறப்பெறுமாயினும் எனக்
கொள்க.
 
  'ஒத்த வடித்தா யுலையா மரபொடு
நிற்பது தானே நிலைமண் டிலமே'

'என்னென் கிளவி யீறாப் பெறுதலும்
அன்னவை பிறவு மந்த நிலைபெற
நிற்கவும் ªÚà நிலைமண் டிலமே'
என்றார் காக்கை பாடினியார்.
 
     'நடு ஆதி அந்தத்து அடைதரு பாதத்து அகவல் அடிமறி மண்டிலமே' எ - து.
எல்லாவடியும் ஒத்து முதல் நடு விறுதி
 

     (6) வேரல் - மூங்கில். பலவு - பலாமரம். செவ்வியை ஆகுமதி - வரைந்து
கொள்ளும் பருவத்தை உடையையாகுக.
 

     (பி - ம்.) 6. இறப்பெறுமெனக். 7. என்றார் காக்கை பாடினியார்.