96

யாப்பருங்கலக் காரிகை

 
யாக உச்சரித்தாலும் ஓசையும் பொருளும் பிழையாது வருவது அடிமறிமண்டில
வாசிரியப்பாவும் எ - று.
 
  (7) 'மனப்படு மடிமுத லாயிறின் மண்டிலம்'
 
என்பது யாப்பருங்கலம் (சூ. 73.)
 
''உரைப்போர் குறிப்பி னுணர்வகை யின்றி
இடைப்பான் முதலீ றென்றிவை தம்முண்
மதிக்கப் படாதன மண்டில யாப்பே'
 

என்றார் காக்கை பாடினியாரும் எனக் கொள்க.
 

வரலாறு

  (8) சூரல் பம்பிய சிறுகா னியாறே
சூரர மகளி ராரணங் கினரே
வார லெனினே யானஞ் சுவலே
சார னாட நீவர லாறே.'
 
     இஃது எல்லா வடியும் முதல் நடுவிறுதியாக வுச்சரிக்க ஓசையும் பொருளும்
பிழையாது வந்தமையால் அடிமறி மண்டில வாசிரியப்பாவாம் எ - று.
 
[நேரிசை யாகு நிலத்தினு மென்ப திணைக்குறட்பா
8நீரின்றண் ணென்னு நிலைமைய தாநிலை மண்டிலப்பா
வேரலென் றாகும் விரைமலர்க் கோதைவில் லேர்நுதலாய்
சூரல்பம் பென்ப தடிமறி 9யாகத் துணிந்தனரே.
 
     இவ்வுரைச் சூத்திரக் காரிகையின் வழியே ஆசிரியப்பா நான் கிற்குங் காட்டிய
இலக்கியங்களை முதனினைத்துக் கொள்க.]
 

(8)
 


     (7) இச்சூத்திரம் சில பிரதிகளில், 'மனப்படு மடிமுத லாயிறின் மண்டிலம்,
நிலைக்குரி மரபி னிற்கவும் பெறுமே' என்று காக்கைபாடினியார் வாக்காகக்
காணப்படுகிறது.

      (8) சூரல் - காலைச் சுற்றிக்கொள்ளத்தக்க சூரற்கொடி; பிரம்பு. சூரர மகளிர் -
தெய்வப் பெண்கள். ஆரணங்கினர் - மிகுதியாகத் தாக்கி வருத்தக் கூடியவர், ஆறு -
வழி.
 

     (பி - ம்.) 8. நீரின் சிறிய நிலைமைய. 9. மண்டிலந் தூமொழியே.
 

----