98

யாப்பருங்கலக் காரிகை

 
'கொல்லையஞ் சாரற் குருந்தொசித்த 8மாயவன்
எல்லிநம் மானுள் வருமே லவன்வாயின்
முல்லையந் தீங்குழல் கேளாமோ தோழீ.'
 

(சிலப். ஆய்ச்.)

     இவை மூன்றடியாய்த் தம்முள் அளவொத்து ஒரு பொருண் மேல் மூன்றடுக்கி
வந்த ஆசிரியத் தாழிசை.
 

 

'(3) வானுற நிமிர்ந்தனை வையக மளந்தனை
பான்மதி விடுத்தனை பல்லுயி ரோம்பினை
நீனிற வண்ணநின் 4னிரைகழ றொழுதனம்.'
 

     இது தனியே வந்த ஆசிரியத் தாழிசை.
 

     [சீர் வரையறுத்திலாமையால் எனைத்துச் சீரானும் மூன்றடியாய் வரப்பெறும்.]
 

     'நான்கடியாய் (4) எருத்தடி நைந்தும் இடை மடக்காயும். இடையிடையே
சுருக்கடியாயும் துறையாம்' எ - து. நான்கடியாய் ஈற்றயலடி குறைந்து வருவனவும்,
நான்கடியாய் ஈற்றயலடி குறைந்து இடைமடக்காய் வருவனவும், நான்கடியாய் இடையிடை
குறைந்து வருவனவும், நான்கடியாய் இடையிடை குறைந்து இடைமடக்காய் வருவனவும்,
ஆசிரியத்துறை எனப்படும் எ - று.
 
     'நான்கடியாய்' என்பதனை எல்லாவற்றோடுங் கூட்டியும், இடைமடக்கு என்பதனை
(5) இருதலையுங் கூட்டி மத்திம தீபமாக்கியும் பொருளுரைத்துக் கொள்க.
 
     சீர் வரையறுத்திலாமையால் எனைத்துச் சீரானும் அடியாய் வரப்பெறும் எனக்
கொள்க.
 

     (3) பான்மதி விடுத்தனை பல்லுயிர் ஓம்பினை - சந்திரனை - உண்டுபண்ணி
அவனைக்கொண்டு பல உயிர்களைக் காப்பாற்றினை; சந்திரன் திருமாலிடம்
தோன்றினமை: 'எங்கண் மாதவ னிதயமா மலர்வரு முதயத் திங்கள்' (வி. பா. குருகுலச்)
1. சந்திரன் ஓஷதிகளையும் உயிர்களையும் வளர்ப்பவன்.

      (4) எருத்தடி - ஈற்றயலடி. எருத்தடி நைந்து வரும் துறை நேரிசை
யாசிரியப்பாவின் இனம்.

      (5) இருதலையும் கூட்டலாவது : 'எருத்தடி நைந்து,' 'இடையிடையே
சுருக்கடியாயும்' என்ற இரண்டனோடுங் கூட்டுவது.'
 

     (பி - ம்.) 3. மாமாயன் 4. னிருகழ.