கருங்கடலுண் மாத்தடிந்தான் 2செழுங்காந்தட் சிறப்புரைத்தன்று. (இ - ள்.) கறுத்த கடலிடத்துச் சூரபன்மாவைக் கொன்றவனுடைய காந்தட்பூவின் மிகுதியைச் சொல்லியது எ-று. (வ - று.) 3குருகு பெயரிய குன்றெறிந் தானும் உருகெழு காந்தண் மலைந்தான்-பொருகழற் 4கார்கருதி வார்முரச மார்க்குங் கடற்றானைப் போர்கருதி யார்மலையார் பூ. (இ - ள்.) குருகின் பெயர்பெற்ற மலையை எறிந்தவனும் அழகு மருவின கோடலைச் சூடினான்; வீரக்கழலினையுடைத்தாய் மேகத்தையொத்து வாராற் பிணித்த முரசுமுழங்குங் கடல்போன்ற சேனையிடத்துப் பூசலை நினைந்து யாவர் சூடார் பூவினை? எ-று. குருகு பெயரிய குன்று-கிரவுஞ்சகிரி. (9)
1. தொல். புறத். சூ. 5. இத்துறையை அகப்புறமென்பார்; யா-வி. 2. காந்தட்பூ : முருகு. 43 - 4. 3. மணி. 5 : 13. 4. பு - வெ. 127. |