1கருதாதார் மதிற்குமரிமேல் ஒருதானாகி யிகன்மிகுத்தன்று (இ - ள்.) பகைவர் அரணாகிய அழிவில்லாததன்மேல் தான் ஒருவனுமேயாகி மாறுபாட்டினைப் பெருக்கியது எ-று. (வ - று.) குளிறு முரசினான் கொண்டா னரணம் களிறுங் கதவிறப் பாயிந்த-ஒளிறும் அயிற்றுப் படைந்த 2வணியெழு வெல்லாம் 3எயிற்றுப் படையா லிடந்து. (இ - ள்.) அதிரும் வீரமுரசினையுடையான் வென்று கைப்பற்றினான் குறும்பினை; போர்யானைகளும் வாய்தலிற் கதவு ஒடியப் பாய்ந்தன; விளங்கும் வேல்வலிசிறந்த நிரைத்த கணைய முழுதும் மருப்பாயுதத்தாலே பெயர்த்து எ-று. (13)
1. "வணங்காதார் மதிற்குமரி" பு.வெ.122. 2. புறநா.14:2. 3. எயிற்றுப்படை:சீவக.2164 |