செருமதிலோர் சிறப்புரைத்தலும் அருமுரணா னத்துறையாகும். (இ - ள்.) போரைச் செய்யும் எயிலினுள்ளோருடைய மிகுதியைக் கூறலும் வெல்லுதற்கரிய மாறுபாட்டாலே முன்புசொன்ன துறையேயாம் எ-று. (வ - று.) அறியார் வயவ ரகத்திழிந்த பின்னும் நெறியார் நெடுமதிலு ணேரார்-மறியாம் கிளியொடு நேராங் கிளவியார் வாட்கட் களியுறு காமங் கலந்து. (இ - ள்.) உணரார் நொச்சிவீரர்; அரணினுள்ளே புகுந்தபின்னும், முடங்குதல் நிறைந்த நெடும்புரிசையுட் பகைவர், மான்மறியாம் கிளியை யொத்த சொல்லினையுடையார் ஒளியினையுடைய கண்ணின் களிப்புற்ற வேட்கை விரவுதலான் எ-று. நேரார்மதிலகத்து இழிந்தபின்னும் வயவரறியார் எனவும் , மறியாம் வாட்கண் எனவும் கூட்டுக. (21) |