மொய்திகழ் வேலோன் முற்றுவிட் டகலப் பெய்தார் மார்பிற் பிறன்வர வுரைத்தன்று. (இ - ள்.) போர்மிகும் வேலோன் சூழ்தல்விட்டுப் போக இட்ட மாலைமார்பினையுடைய வேற்றுவேந்தன் வரவினைச் சொல்லியது எ-று. (வ - று.) உவனின் றுறுதுயர முய்யாமை நோக்கி அவனென் றுலகேத்து மாண்மை -இவனன்றி மற்றியார் செய்வார் மழைதுஞ்சு நீளரணம் முற்றியார் முற்று விட. (இ - ள்.) உவன் இற்றைநாளிலே பொருந்தும் விதனத்தினின்றும் ஒழியாமையைப் பார்த்து அப்படிக் கொடுத்தவனென்று சொல்லி உயர்ந் தோர் புகழும் ஆண்மைத்தன்மையினையுடைய இவனல்லது மற்று யாவர் இது செய்யவல்லார்! மேகம் உறங்கும் நீண்ட மதிலைச் சூழுப்போனார் வளைவு விட எ-று. (25) |