13. தந்துநிறை
வார்வலந்த துடிவிம்ம
ஊர்புகல நிரையுய்த்தன்று.

(இ - ள்.) வாராலே கட்டின துடி கறங்க ஊரினுள்ளார் விரும்ப ஆனிரையை மன்றத்திடத்துச் செலுத்தியது எ-று.

(வ - று.)
1தண்டா விருப்பின டன்னை தலைமலைந்த
வண்டார் கமழ்கண்ணி வாழ்கென்று - கண்டாள்
அணிநிரை வாண்முறுவ லம்மா வெயிற்றி
2மணிநிரை மல்கிய மன்று.

(இ - ள்.) தணியாத உவகையினையுடையளாகித் தன்னுடைய சுவாமி தலையிலே சூடின வண்டுநிறைந்த நறுநாற்றம் வீசும் மாலை வாழ்வதாகவென்று நோக்கினாள், அலங்காரமுடைத்தாக ஒழுங்குபட்டு ஒளிவிடா நின்ற பல்லினையும் அழகிய பெருமையினை முடைய மறத்தி, மணியணிந்த பசுமிக்க மன்றத்தை எ - று.

எயிற்றி கண்டாளெனக் கூட்டுக.

(13)

1. தொல். புறத். சூ. 3, இளம். மேற். 2. புறநா. 387 : 24.