முன்னெழுதரு படைதாங்குவனென மன்னவற்கு மறங்கிளந்தன்று. (இ - ள்.) தூசிப்படையைத் தடுப்பனென அரசற்கு ஒரு வீரன் தனது தறுகண்மையைச் சொல்லியது எ-று. (வ - று.) உறுசுடர் வாளோ டொருகால் விலங்கின் சிறுசுடர்முற் பேரிருளாங் கண்டாய் - எறிசுடர்வேற் றேங்குலாம் பூந்தெரியற் றேர்வேந்தே நின்னோடு பாங்கலா மன்னர் படை . (இ - ள்.) மிக்க ஒளியினையுடைய வாளுடனே யான் ஒருகால் தடுப்பிற் சிறிய விளக்கின் முன்னர் பெரிய இருள்போல இரிந்தோடுங் காண்; எறியும் கதிர்வேலினையும் மதுமலர்ந்த பூமாலையினையுமுடைய தேர் மன்னனே. நின்னோடு உறவல்லாத வேந்தர்சேனை எ-று. (8) |