தம்மிறைவன் விசும்படைந்தென வெம்முரணா னுயிர்வேட்டன்று. (இ - ள்.) தம் வேந்தன் விசும்பைச் சேர்ந்தானாக , வெய்ய மாறுபாட்டை யுடையானொருவீரன் உயிரை ஆகுதிபண்ணியது எ-று. (வ - று.) 2வான மிறைவன் படர்ந்தென வாடுடுப்பா மானமே நெய்யா மறம்விறகாத்- தேனிமிரும் கள்ளவிழ் கண்ணிக் கழல்வெய்யோன் வாளமர் ஒள்ளழலுள் வேட்டா னுயிர். (இ - ள்.) விண்ணிடத்து வேந்தன் சென்றானாக, வாளே சுருவமாக அபிமானம் ஓமநெய்யாக மறமே சமிதையாக வண்டுபரக்கும் மது மலர்ந்த மாலையினையும் வீரக்கழலினையுமுடைய வெவ்வியோன் வாட்போராகிய ஒள்ளிய தீயுள் உயிரை ஆகுதிபண்ணினான் எ-று. (26)
1. இத்துறை தன்னுறுதொழிலின்பாற் படும். 2. தொல். புறத். சூ. 14, இளம், மேற். |