156. வாகை அரவம்
வெண்கண்ணியுங் கருங்கழலும்
செங்கச்சுந் தகைபுனைந்தன்று.

(இ - ள்.) வெள்ளைமாலையினையும் வலிய வீரக்கழலினையும் சிவந்த கச்சினையும் அழகிதாக அணிந்தது. எ-று.

வெண்கண்ணி-கொத்தான்வாகை.

(வ - று.)
அனைய வமரு ளயில்போழ் 1விழுப்புண்
இனைய வினிக்கவலை யில்லை - புனைக
அழலோ டிமைக்கு மணங்குடைவாண் மைந்தர்
கழலோடு 2பூங்கண்ணி கச்சு.

(இ - ள்.) அத்தன்மையவாகிய பூசலிலே வேல்பிளந்த சீரிய புண் இத்தன்மையவாயின; மேல் ஓர் துயரம் இல்லை; அணிக, நெருப்போடிலங்கும் பகைவர்க்கு வருத்தஞ் செய்தலுடைய வாண்மள்ளர், வீரக்கழலினையும் பொலிந்த மாலையினையும் கச்சினையும் எ-று.

(2)

1. குறள்.776.
2. (பி-ம்) 1. பூங்கண்ணிக்கச்சு