துணிபுணருந் தொல்கேள்விக் கணிவனது புகழ்கிளந்தன்று. (இ - ள்.) நிச்சயித்துப் பலவுமறியும் பழைய கேள்விஞானத்தினையுடைய சோதிடநூல் வல்லவனது கீர்த்தியைச் சொல்லியது எ-று. (வ - று.) 12புரிவின்றி 3யாக்கைபோற் போற்றுவ போற்றிப் பரிவின்றிப் பட்டாங் கறியத் - திரிவின்றி விண்ணிவ் வுலகம் விளைக்கும் விளைவெல்லாம் கண்ணி யுரைப்பான் கணி . (இ - ள்.) தப்பாதபடி தன் உடம்புபோலே பரிகரிக்கக்கடவ நூல்களைப் பலகாலுங் கற்று அடிப்படுத்தித் துன்பமின்றி உண்மையுணரத் தப்பின்றிச் சுவர்க்கம் இப்புவி உண்டாக்கும் நிகழ்ச்சியெல்லாம் கருதிச்சொல்லுமவன் சோதிடவன் எ-று. (20)
1. தொல். புறத். சூ. 16, இளம். மேற். 2. புரிவின்றித் தன்யாக்கைபோற்றுவ 3. ஆசார. 96. |