நெடுமதி லெறிந்து நிரைதார் மன்னன் கடுமி களைந்த மலிவுரைத் தன்று. (இ - ள்.) நீண்ட அரணினையழித்து நிரைத்த மாலையினையுடைய வேந்தன் குடுமி களைந்த மிகுதியைச் சொல்லியது எ-று. (வ - று.) 1பூந்தா மரையிற் பொடித்துப் புகல்விசும்பின் வேந்தனை வென்றான் விறன்முருகன் - ஏந்தும் நெடுமதில் கொண்டு நிலமிசையோ ரேத்தக் 2குடுமி களைந்தானெங் கோ. (இ - ள்.) பொலிவினையுடைய சரவணப்பொய்கையில் தாமரைப் பூவிலே தோன்றி வெற்றியாலுயர்ந்த விண்ணுலகத்தில் இந்திரனைவென்றான், வெற்றியினையுடைய குமரவேள்; அழகேந்தும் உயரிய அரணைக் கைக்கொண்டு பூமியிலுள்ளோர் வாழ்த்தத் தன்மயிர்ச்சிகையைக் கூட்டி முடித்தான், எம்மன்னன் எ-று. மதிலரசர் மணிமுடி கடந்தானென்றுமாம். (21)
1. பரி. 5 : 49 - 56. 2. புறநா. 77: 2: கூர்ம. சுவேதவராசு. 5. |