218. பொருநாற்றுப்படை
பெருநல்லா னுழையீராகெனப்
பொருநனை யாற்றுப்படுத்தன்று.

(இ - ள்.) மிக்க நன்மையினையுடையவன் பக்கத்தீராவெனக்கிணைகொட்டுமவனை வழிப்படுத்தது எ-று.

(வ - று.)
தெருவி லலமருந் தெண்கட் 1டடாரிப்
பொருவில் பொருநநீ செல்லிற்- செருவில்
அடுந்தடக்கை நோன்றா ளமர்வெய்யோ னீயும்
நெடுந்தடக்கை யானை நிரை.

(இ - ள்.) தெருவிலே சுழன்று திரியும் தெளிந்த கண்ணால் மலிந்த கிணையினையுடைய ஒப்பில்லாத பொருநனே, நீ போவாயாகிற் பூசலிடத்துக் கொல்லும் பெரியகையினையும் வலிய தாளினையுமுடைய போரை விரும்புவோன் வழங்குவன்; உயர்ந்த பெரிய கையினையுடைய களிற்றின் நிரையை எ-று.

(30)

1. மதுரைக்.99-102,ந + பதிற் .57: 6,உரை.