மலைத்தெழுந்தோர் மறஞ்சாயத் தலைக்கொண்ட நிரைபெயர்த்தன்று. (இ - ள்.) மாறுபட்டெழுந்தார் மாற்சரியங் கெடக் கைப்பற்றின நிரையை மீட்டது எ-று. (வ - று.) 1அழுங்கனீர் வையகத் தாருயிரைக் கூற்றம் விழுங்கியபின் வீடுகொண் டற்றாற் - செழுங்குடிகள் தாரார் கரந்தை தலைமலைந்து தாங்கோடல் நேரார்கைக் கொண்ட நிரை. (இ - ள்.) ஆரவாரியாநின்ற கடல்சூழ்ந்த ஞாலத்துப் பெறுதற்கரிய உயிரைக் கூற்றுவன் உண்டபின்பு மீட்ட தன்மைத்து; வளப்பத்தினை யுடைய மறக்குடிகள் 2கொப்புநிறைந்த கரந்தையைத் தலையிலேசூடித் தாங்கொள்ளுமது, பகைவர் கைப்பற்றின ஆனிரையை எ - று. கோடல் வீடுகொண்டற்றென்க. ஆல் : ஆசை. தாம் கோடலைப் பொறாத வெட்சியார் கையினின்றும் கொள்ளப்பட்டன நிரை; இது வீடு கொண்டற்றென்றுமாம். (1)
1. தொல். புறத். சூ. 5, இளம். மேற். 2. கொத்து |