மூவர்கொடி யுள்ளு மொன்றொடு பொரீஇ மேவரு மன்னவன் கொடிபுகழ்ந் தன்று. (இ - ள்.) அரி அயன் அரனென்னும் மூவர்கொடியுள்ளும் ஒன்றொடு உவமித்துப் பலரும் பொருத்துதல்வரும் வேந்தனுடைய கொடியைப் புகழ்ந்த்து எ-று. (வ - று.) 1பூங்க ணெடுமுடிப் பூவைப்பூ மேனியான் 2பாம்புண் பறவைக் கொடிபோல -ஓங்குக பல்யானை மன்னர் பணியப் பனிமலர்த்தார்க் கொல்யானை மன்னன் கொடி. (இ - ள்.) பொலிந்த கண்ணினையும் நெடிய திருமுடியினையும் காயாவின் மலர் போன்ற திருமேனியினையுமுடைய மாயவன் பாம்பை யருந்தும் கருடக்கொடியை யொப்ப உயர்க; பலவாரணத்தையுடைய வேந்தர் வணங்கக் குளிர்ந்த பூவாற்செய்த மாலையினையும் கொல்லுங் களிற்றினையுமுடைய வேந்தன்றன் வீரக்கொடி எ-று. வீரக்கொடி ஓங்குகவென்க. (39)
1. தொல் , புறத் .சூ.27, இளம். மேற்; சூ.31, ந. மேற். 2. முருகு. 150-51; பரி . 4:41-2. |