1நிரைகோள் கேட்டுச் செய்தொழி லொழிய 2விரைவனர் குழூஉம் வகையுரைத் தன்று. (இ - ள்.) பசுநிரையைக் கைப்பற்றினமை கேட்டுச் செய்யாநின்ற காரியம் தவிரக் கடுகினராகித் திரளுங் கூறுபாட்டைச் சொல்லியது எ-று. (வ - று.) 3காலார் கழலார் கடுஞ்சிலையார் கைக்கொண்ட வேலார் வெருவந்த தோற்றத்தார் - காலன் கிளர்ந்தாலும் போல்வார் கிணைப்பூசல் கேட்டே உளர்ந்தார் நிரைப்பெயர்வு முண்டு. (இ - ள்.) காலிலை நிறைந்த வீரக்கழலினையுடையார், கொடிய வில்லினையுடையார், கையிலேயெடுத்த வேலினையுடையார், அஞ்சத்தக்க காட்சியினையுடையார், கூற்றுவன் கோபித்தாலுமொப்பார், தடாரி யோசையைக் கேட்டு அசைந்தார்; வெட்சியார் கொண்ட ஆனிரை மீள்கையும் கூடும் எ-று. (2)
1. சீவக. 428, ந. மேற். 2. விரையினர், விரையுனர் 3. நன். சூ. 354, மயிலை. மேற். |