ஏழக மூரினு மின்ன னென்றவன் தாழ்வி லூக்கமொடு தகைபுகழ்ந் தன்று. (இ - ள்.) ஏழகத்தகரினை மேற்கொண்டு செலுத்தினும் இத்தன்மையனென்று அவனுடைய குற்றமில்லாத மனவெழுச்சியோடு மிகுதியைச் சொல்லியது எ-று. (வ - று.) எம்மனை யாமகிழ 1வேழக மேற்கொளினும் தம்மதி 2றாழ்வீழ்த் திருக்குமே - தெம்முனையுள் மானொடு தோன்றி மறலுங்கா லேழகத் தானொடு நேரா மரசு . (இ - ள்.) எம்முடைய இல்லிடத்து யாங்கள் பிரியப்பட ஏழகத்தையேறினும் , தம்முடைய அரணிடத்துத் தாழ்கோத்திருக்கும் , பகைப்புலத்துக் குதிரைமிசையே தோற்றிப் போரைச் செய்யுங்காலத்துக் கிடாயின்மேல் அமைந்தானொடு செலவாம், அரசு எ-று. (5)
1. மேழகம் 2. றாள் |