25. போர் மலைதல்
1வெட்சி யாரைக் கண்ணுற்று வளைஇ
உட்குவரத் தாக்கி 2யுறழ்செருப் புரிந்தன்று.

(இ - ள்.) வெட்சியாரைக் கிட்டிச் சூழ்ந்து அஞ்சத்தாக்கி எடுப்பும் சாய்ப்புமான பூசலை மேற்கொண்டது எ-று.

(வ - று.)
3புலிக்கணமுஞ் சீயமும் போர்க்களிறும் போல்வார்
வலிச்சினமு மானமுந் தேசும் - ஒலிக்கும்
அருமுனை வெஞ்சுரத் தான்பூசற் கோடிச்
செருமலைந்தார் சீற்றஞ் சிறந்து.

(இ - ள்.) புலியினதுதிரளும் சிங்கமும் போர்பொரும் யானையு மொப்பார், வலிமிக்க சீற்றமும் அபிமானமும் பெருமையும்;ஆரவாரிக்கும் கிட்டுதற்கரிய பகைப்புலவழியிலே நிரைகொண்டார் வெட்சியா ரென்னும் ஆரவாரத்தாற் கடுகிப் பூசலைச்செய்தார், கோபமிக்கு எ-று.

சிறந்து செருமலைந்தாரென்க.

(4)

1. புறநா.259.உரை,மேற்.
2. 'யுளர்செருப்'
3. தொல்.புறத்.சூ.5,இளம்.மேற்.