அவன்பெயர்கன் மிசைப்பொறித்துக் கவின்பெறக் கன்னாட்டின்று. (இ - ள்.) வீரன் நாமத்தைக் கல்லிலே எழுதி அழகுபெறக் கல்லை நட்டது எ-று. (வ - று.) 1மாலை துயல மணியெறிந்து மட்டுகுத்துப் பீலி யணிந்து பெயர்பொறித்து - வேலமருள் ஆண்டக நின்ற வமர்வெய்யோற் காகென்று காண்டக நாட்டினார் கல் . (இ - ள்.) மாலையசையத் தூமமணியைக் கறங்கப்பண்ணி மதுவைத் தெளித்துப் பீலியைச் சூட்டி அவன்பெயரை எழுதி வேற்பூசலிடத்து ஆண்மைத்தன்மை மிகுதிபெற நின்ற போரை விரும்பினவனுக்கு இஃது உருவமாகவென்று சொல்லிக் காட்சிபொருந்த நட்டார் கல்லினை எ-று. (12)
1. தொல். புறத். சூ. 5, இளம். மேற் |