271. பொருண்மொழிக் காஞ்சி
எரிந்தி லங்கு சடைமுடி முனிவர்
புரிந்து பண்ட பொருண்மொழிந் தன்று.

(இ - ள்.) அவிர்ந்து விளங்கும் சடாமகுடத்தினையுடைய முனிவர் விரும்பித் தெளிந்த பொருளைச் சொல்லியது எ-று.

(வ - று.)
1ஆய பெருமை யவிர்சடையோ ராய்ந்துணர்ந்த
பாய நெறிமேற் படர்ந்தொடுங்கித் - தீய
இபுளொடு வைகா திடம்படு ஞாலத்
தருளொடு வைகி யகல்.

(இ - ள்.) உண்டாய பெருமையினையும் விளங்கும் வேணியினையும் உடையோராகிய முனிவர் தெரிந்தறிந்த பரந்த வழிமேலே நினைந்து அடங்கித் தீதான மனமயக்கத்துடனே தங்காது அகன்ற பூமியிடத்தில் அருளுடனேதங்கி நீங்கு, நெஞ்சே எ-று.

(3)

1. ஏலாதி,67.