275. முல்லை
தடவரை மார்பன் றன்னமர் காதல்
மடவரற் புணர்ந்த மகிழ்ச்சிநிலை யுரைத்தன்று.

(இ - ள்.) பெரிய மலைபோன்ற மார்பன் தன்னை மேவின அன்பினையுடைய மடப்பத்தினையுடையாளைக் கூடிய மிகுதியைச் சொல்லியது எ-று.

(வ - று.)
ஊதை யுளர வொசிந்து மணங்கமழும்
கோதைபோன் முல்லைக் கொடிமருங்குற்- பேதை
குவைஇ யிணைந்த குவிமுலை யாகம்
கவைஇக் கவலை யிலம்.

(இ - ள்.) காற்று அசைப்ப வணங்கி மணநாறும் மாலைபோன்ற முல்லைக் கொடியை ஒக்கும் இடையினையுடைய மடவாள் திரண்டு தம்மில் இணையொத்த குவிந்த முலையினையுடைய மார்பைத் தழுவிக் கொண்டு துயரமிலேமாயினேம் எ-று.

முல்லைக்கொடிமருங்குற் பேதையாகமெனக் கூட்டுக.

(1)