1பொன்றிகழ் சுணங்கிற் பூங்க ணரிவை நன்றறி கொழுநனை நலமிகுத் தன்று. (இ - ள்.) பொன்போல் இலங்கும் சுணங்கினையும் பொலிந்த கண்ணினையுமுடைய மடந்தை நன்மையறியும் கொழுநனுடைய நன்மையைப் பெருகச் சொல்லியது எ-று. (வ - று.) 2நெய்கொ ணிணந்தூ நிறைய வமைத்திட்ட குய்கொ ளடிசில் பிறர்நுகர்க-வைகலும் அங்குழைக் கீரை யடகு மிசையினும் எங்கணவ னல்க லினிது. (இ - ள்.) நெய்யைத் தன்னிடத்துக் கொண்ட நிணமும் தசையும் மிகக்கூட்டி ஆக்கின பொரிக்கறியுடைத்தான சோற்றைப் பிறர் அருந்துக,நாடோறும்; அழகிய தளிரையுடைய கீரையாகிய இலைக்கறியை நுகரினும் எமது கொழுநன்அருளுமது, இனிதாயிருக்கும் எமக்கு எ-று. குய்-நகையென்றுமாம். (8)
1. முருகு. 145. 2. மதுரைக். 755-8. |